மனோ – மைத்திரி சந்திப்பு

முன்நாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும் இடையில் நேற்று கொழும்பில், சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல் முறை சம்மந்தமாக இருவரும் கலந்துரையாடியதாக அறியமுடிகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளது என தகவல்கள் வெளிவரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எந்த விடயங்களும் பேசவில்லையெனவும், தேர்தல் முறைமை தொடர்பிலும், அதன் மாற்றங்கள் தொடர்பிலும் பேசப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.

மனோ - மைத்திரி சந்திப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version