LPL நாள் ஐந்து – கொழும்பு தம்புள்ள மோதல்!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் ஐந்தாம் நாளின் முதற் போட்டி, கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் தம்புள்ள ஓரா அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

கொழும்பு அணி இன்றைய தினம் மூன்றாவது போட்டியில் விளையாடுகின்ற நிலையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது. நான்காவது போட்டியில் விளையாடும் தம்புள்ளை அணி, ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

பல்லேகல மைதானத்தில் அதிக வெப்பம் நிலவும் அதேவேளை மழைக்கான வாய்ப்புகள் சிறிதளவு இல்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version