வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10.08) இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் 8 ஆவது மாடியில் இருந்து வீழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்ட அவர், சிகிச்சைப் பலினின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.