மனநலம் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மனநல பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக, மனநலம் பாதிப்பு தொடர்பான வைத்தியர்களை சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காலி, கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையின் விசேட மனநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மனநல ஆலோசனை பெற வருகை தருவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொருளாதார சுமை மற்றும் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையின்மை போன்ற காரணங்களினாலேயே மனநல பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் உள்ள இளைஞர்களின் நிலை வெகுவாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version