அசோக் செல்வனை கரம் பிடிக்கிறார் கீர்த்தி!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் அருண்பாண்டியன். இவர் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக காதலித்து வந்த இவர்கள் இருவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடத்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களுடைய திருமணம் செப்டம்பர் 13-ம் திகதி திருநெல்வேலியில் உள்ள ரெட்டியார்பட்டியில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட இருப்பதாகவும் பின்னர் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version