மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15.08) சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய திருவிழாத் திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் ஆயர்கள் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
இன்றைய திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சில அமைச்சர்களும் பங்கேற்றனர்.
வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி இடம்பெறும் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இம்முறை சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடு திருத்தல பகுதியில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட ரயில் சேவையும் இயக்கப்படவுள்ளது.