சிறுநீரக நோயாளர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை முன்பைப் போலவே வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 647,683 பேருக்கு முன்பைப் போன்று சம்பளம் வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில தினங்களில் பணம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, காத்திருப்போர் பட்டியல் உட்பட 517,962 பேருக்கு முதியோர் கொடுப்பனவும், 88,602 பேருக்கு ஊனமுற்றோருக்கான கொடுப்பனவும், 41,119 பேருக்கு சிறுநீரக நோயாளர் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதியோர் கொடுப்பனவு அஞ்சல் அலுவலகங்களிலும் ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவு பிரதேச செயலகங்களிலிருந்தும் கிடைக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.