மேற்கு ஆபிரிக்க கடற்பரப்பில் படகு விபத்து – 60 பேர் பலி!

மேற்கு ஆபிரிக்க கடற்பரப்பில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கப்பலில் சுமார் நூறு புலம்பெயர்ந்தோர் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குறித்த கப்பல் கடலில் பயணித்ததாகவும், அது அடித்துச் செல்லப்பட்டு கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. கப்பலில் இருந்த 38 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

செனகல் மற்றும் சியரா லியோனை சேர்ந்தவர்கள் இந்த கப்பலில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version