பாலியல் கல்வி திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!

முன்பள்ளி முதல் தரம் 13 வரையிலான சிறார்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் வேலைத்திட்டத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற மன்றத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, முன்பள்ளிச் சிறார்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் பாலுணர்வு அறிவை வழங்குவதற்காக பதினான்கு புத்தகங்கள் தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்துப் புத்தகங்களையும் ஒரே நேரத்தில் அச்சிடுவது கடினம் என்பதால், கூடுதல் வாசிப்புப் புத்தகங்கள் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாகவும், முதலில் குழந்தைகளுக்கு ஆன்லைனில் கலந்தாலோசிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதன் பிறகு அரசு சார்பற்றவர்களின் ஆதரவைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply