கொக்கேய்ன் போதைப்பொருளுடன் நாரஹேன்பிட்டில் இருவர் கைது!

நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிலோ 294 கிராம் கொக்கேய்னுடன் பிலிப்பன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​போதைப்பொருள் பெறுவதற்காக விடுதிக்கு காரில் வந்த நபர் ஒருவரும் 07 இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருலப்பனை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள முக்கிய போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இந்த போதைப்பொருட்களை கைமாற்றும் பனி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 28 வயதான பிலிப்பைன்ஸ் பிரஜை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version