உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான உயர்த்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இம்மாதத்தின் இறுதியில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் அமிந்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை க.பொ.த சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களுக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் நேற்று (18.08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version