யாழில் விபத்து – ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், A 9 வீதியின் செம்மணி வளைவிற்குட்பட்ட பகுதியில் இன்று (18.08) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் கொண்டு செல்லும் பாரவூர்தி, மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய , மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கணவன் மனைவி என தெரியவந்துள்ளதுடன், கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் புவனேஸ்வரன் மனோஜ் (31 வயது) எனும் கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version