சுற்றுலா சென்ற மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி நேற்று (20.08) உயிரிழந்துள்ளார். 

 உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த மாணவர் பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே தலையை விட்டு பயணித்ததால் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

படுகாயமடைந்த மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version