இலங்கை 19 வயது அணி வெற்றி – சர்வதேச தளத்தில் கால் பதித்த தமிழ் கிரிக்கெட் வீரர்!

இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகளின் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இலங்கை தம்புள்ள ரங்கிரி சர்வேதச கிரிக்கெட் மைதானத்தில் முதலாவது 50 ஓவர் போட்டியில் இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணி 6 விக்கட்டுகளால் இலகு வெற்றி.

இன்றைய போட்டியில், தமிழ் வீரராக சர்வதேச கிரிக்கெட் தளத்தில் 17 வயதான சாருஜன் சண்முகநாதன் நல்ல ஆரம்பத்தை பெற்றுகொடுத்துள்ளார், விக்கெட் காப்பாளராக இரண்டு பிடிகளை பெற்ற அவர் ஆறாம் இழக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களை பெற்று போட்டியினை நிறைவு செய்து வைத்தார்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் 19 வயதிற்கு உட்பட்ட அணி 49.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இதில் மேதன் சீலி 75 ஓட்டங்களையும் , ஹேட்ரியன் வீர் 32 பெற்றுக்கொண்டனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் கருக சங்கீத் மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார். தினுற கழுபஹான 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட அணி முதல் இரு விக்கட்டுகளை வேகமாக இழந்த பொதும், மத்திய தர வரிசை வீரர்களின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது. துடுப்பாட்டத்தில் ரவிஷன் நெத்சர 65 ஓட்டங்களையும், சுபுன் வாதுகே 56 ஓட்டங்களையும், தினுற களுபஹான ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் பெற்றனர். மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணியின் பந்து வீச்சில் மேதன் எட்வர்ட் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

3 போட்டிகள் அடங்கிய தொடரில் இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version