நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கும் வைத்தியர்கள்!

சுமார் 5,000 வைத்தியர்கள் தகுதிபெற்று வெளிநாடு செல்ல தயாராக உள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் 1,500 மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில்  அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை இன்று (09.04) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

வைத்தியர்கள் தொடர்ந்தும் வெளிநாடுகளுக்குச் சென்றால் இந்நாட்டின் பிரதான வைத்தியசாலைகளில் கூட பிரச்சினைகள் எழலாம் என வைத்தியர் அளுத்கே தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version