நுகர்வோர் அதிகார சபை வர்த்தமானியினை வெளியிடுவதும், பின்னர் அதனை இரத்து செய்வதுமே அவரகளது கடமையாக செய்து வருகிறது. வியாபாரிகளே விலைகளை தீர்மாணிக்கின்றனர். பிறகு ஏன் நுகர்வோர் அதிகார சபை? அவர்களுக்கு ஏன் மக்கள் வரி பணத்தில் சம்பளம் எதற்கு வழங்கவேண்டும் என நுகர்வோர் நலன் செயற்பாட்டாளர் அசேல சம்பத் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்தோடு இன்று (6/11) நுகர்வோர் அதிகார சபையின் முன்னதாக அமைதி வழி போராட்டம் ஒன்றை நடாத்தவுளளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தில் நுகர்வோர் அதிகாரசபைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், அதனை மூடிவிடுமாறு கோரிக்கையினை முன் வைத்தே இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
