பல ரயில் சேவைகள் இரத்து!

ரயில் இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11.09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக இன்று (12.09) பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பில் இருந்து இயக்கப்படவிருந்த குறுகிய ரயில் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக ரயில் பொறியியலாளர்கள் நேற்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில், அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version