இலங்கைக்கு விஜயம் செய்யும் IMF குழு!

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு இன்று (14.09) இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில்  அதுகுறித்த முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளுக்காக குறித்த குழு இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு இலங்கை வரும் குழுவானது வரும் 27 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கும் என்பதுடன், கடன் சீர்திருத்தம் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version