கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மாயம்!

இலங்கையில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (14.09) காணாமல்போயுள்ளார்.

கிளிநொச்சி புதுயன்குளம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிற்கு அருகில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி நடைபெறுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பில் சோதனைக்கு சென்ற அதிகாரியே காணமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சோதனையின் போது சட்டவிரோத மதுபானம் தயாரித்து வந்த சந்தேகநபர்கள் கால்வாயில் குதித்து நீந்தி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சி ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version