திலீபனின் நினைவேந்தல் : இன முரண்பாடு ஏற்படும்!

தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி ஊடாக இன முரண்பாடு தோற்றம் பெறும் நிலை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20.09) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், திலீபனின் நினைவு ஊர்தி தம்பலகாமம் பகுதி ஊடகாக திருகோணமலைக்கு சென்றுள்ளது எனவும், குறித்த ஊர்தியானது சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதியை தவிர்த்து திருகோணமலைக்கு சென்றிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் சிங்களவர்களின் கோபத்தை தூண்டி விடும் வகையில் இந்த பவனி சென்றுள்ளது எனவும், இதனால் தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் நிலை காணப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

திலீபனின் நினைவேந்தல் பவனி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவிக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version