ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடைகளை நீக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதை தவிர்த்து அத்தியாவசிய பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்து அரசாங்க வருமானம் அதிகரித்ததன் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது தடைசெய்யப்பட்ட அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு யாரும் அரசாங்கத்திடம் கோருவார்கள் என்று தாம் நினைக்கவில்லை ராணாவும் அவர் தெரிவித்துள்ளார்.