மஹா ஓயா பெருக்கெடுத்துள்ளமையின் காரணமாக குருணாகல் – கொழும்பு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன் கிரிவுல்ல நகரம் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஆகவே குருணாகல் – கொழும்பு (வழித்தட இலக்கம் 5) வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
