வாகன வருமான அனுமதிபத்திரம் வழங்குவது தொடர்பில் விசேட அறிவிப்பு!

கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கணனி முறைமை மேம்படுத்தல் காரணமாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக மாகாண பிரதம செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வருவாய் உரிமங்கள் வழங்குவது செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 02, 2023 வரை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, செப்டம்பர் 26ஆம் திகதியுடன் காலாவதியாகும் வாகன வருவாய் உரிமங்களை அக்டோபர் 10ஆம் திகதி வரை காலதாமதமாக அபராதம் செலுத்தாமல் புதுப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், www.motortraffic.wp.gov.lk என்ற மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வாகன வருவாய் உரிமங்களை ஆன்லைனில் வழங்குவதும் செப்டம்பர் 24 நள்ளிரவு முதல் அக்டோபர் 06, வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version