இலங்கை அணி உலகக்கிண்ண தொடருக்காக இந்தியா புறப்பட்டது

இலங்கை அணி உலகக்கிண்ண தொடருக்காக இந்தியா புறப்பட்ட வீடியோ. SriLanka Cricket Team leave to India

இலங்கை கிரிக்கட் அணி உலகக்கிண்ண தொடரில் பங்குபற்றுவதற்காக இந்தியாவுக்கு புறப்பட்டது. இன்று(26.09) இரவு 8.30 அளவில் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இருந்து இலங்கை அணி புறப்பட்டது.

அணி வீரர்கள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் அணி முகாமைத்துவத்தை சேர்ந்தவர்கள் என சகலரும் குழு புகைப்படம் எடுத்த பின்னர் நான்கு மத சமய அனுஷ்டானங்களும் இடம்பெற்றன. அதன் பின்னர் வீரர்கள விமான நிலையம் நோக்கி புறப்பட்டனர்.

ரசிகர்கள், வீரர்களின் குடும்ப உறவினர்கள் வழியனுப்பும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த அணியோடு மஹீஸ் தீக்ஷண இந்தியாவுக்கு பயணமாகவில்லை. அவருக்கு ஏற்பட்ட உபாதை குணமடையாத நிலையில் அவர் தாமதமாகவே இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளார். ஏனைய சகல வீரர்களும் இந்தியாவுக்கு பயணமாகியுள்ளனர்.

இலங்கை அணி 29 ஆம் திகதி பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது. ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி தென்னாபிரிக்கா அணியுடன் முதற் போட்டியில் விளையாடவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version