மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் கைது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் மாவனெல்ல பிரதேச சபையின் உப தவிசாளருமான K.G பியதிஸ்ஸ உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆசிரியர்களை மிரட்டிய குற்றச்சாட்டுக்காகவே குறித்த மூவரும் கைது செய்யபப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவனெல்ல கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, கடந்த 3ஆம் திகதியன்று சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வேளை அங்கு வருகைதந்த மாவனெல்ல பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் மூவரினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்து குறித்த ஆசிரியர்களினால் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தமையை தொடர்ந்து பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் கைது
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version