மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களிடம் ஆலோசனை…

2023 ஆம் ஆண்டிற்கான இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச 3வது மின்சார கட்டண திருத்தம் 2023 முன்மொழிவை www.pucsl.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று பார்வையிட முடியும் என அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட 3 வது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் அக்டோபர் 18, ம் திகதி வரை தெரிவிக்கலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 வது பிரிவின் கீழ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது.

மேலதிக, விவரங்களுக்கு https://www.pucsl.gov.lk/notices/stakeholder-consultation-on-the-proposed-3rd-electricity-tariff-revision-2023/ ஐப் பார்வையிடவும்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version