அமீரக தமிழ் தொழில்முனைவோர் வர்த்தக அரங்கு அங்குரார்ப்பணம்.

டுபாயில் அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பு மற்றும் இளம் தொழில்முனைவோர் பெடரேசன் ஆகியவை இணைந்து சிறப்பு கருத்தரங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்தியது. இந்த கருத்தரங்கையொட்டி வர்த்தக அரங்கு அமைக்கப்பட்டது. அந்த அரங்கை அமீரக தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முன்னாள் அமைச்சர் டொக்டர் முஹம்மது செய்யது அல் கிந்தி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் டுபாய் பொருளாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் வலித் அல் மாலிக், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் சதக்கத்துல்லா, இளம் தொழில்முனைவோர் பெடரேசனின் தலைவர் ஆனந்த், ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ், அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் பால் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version