பொலிஸ் உத்தியோகத்தர் மீது கார் மோதி விபத்து – கொழும்பில் சம்பவம்

கறுவாத்தோட்டம் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று(05.10) மாலை சொகுசு காரொன்று மோதியதில் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு சுதந்திர சதுக்க பாதைக்கு அருகில் உள்ள சுற்றுவட்டத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வழியே பயணித்த சொகுசு கார் ஒன்று அந்த இடத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதி, சுற்றுவட்டத்தின் நடுவில் உள்ள நீரூற்றில் மோதி நின்றுள்ளது.

கார் ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், காரின் சாரதி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்த வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version