எல்ல பாலத்திற்கு அருகில் ரயில் மோதி இருவருக்கு காயம்!

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலத்தில் இளைஞனும் யுவதியும் புகையிரதத்தில் மோதுண்டுள்ளனர்.

எல்ல பாலத்தைப் பார்ப்பதற்காக சென்றிருந்த இருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இளைஞனுக்கு 21 வயது எனவும் சிறுமிக்கு 18 வயது எனவும் தெரியவந்துள்ளது.

ரயில் வரும் போது குகை அருகே அவர்கள் ஒதுங்கியிருந்த இடம் பற்றாக்குறையாக இருந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இருவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version