மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்காக இலங்கை மின்சார சபையினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இன்று(20.10) முதல் இந்த அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுளளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மின்சார கட்டணத்தில் 18 சதவீத அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.
மேலதிக விபரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.