கசிப்பு தயாரித்த சீன பிராஜைகள் கைது!

வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்று (19.10) கொழும்பு துறைமுக நகரில் பணிப் பரிசோதகர்களாக பணிபுரியும் சீனப் பிரஜைகள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கசிப்பு வடிகட்டுதல் கருவிகள், 250 லிட்டர் கசிப்பு, மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சீன பிரஜைகளும் 41 மற்றும் 46 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப் பிரஜைகளாகிய இவர்கள் இருவரும் கொழும்பு துறைமுக நகரத்தில் பணிப் பரிசோதகர்களாக பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version