பாலூட்டும் தாய்க்கு நேர்ந்த கதி!

பூகொட, அம்பகஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரின் குழந்தையைப் பிணையாக கையிலேந்தி, மிரட்டி மூன்று இளைஞர்கள், குறித்த இளம் தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பூகொட பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது.

குழந்தையை தரையில் அடிக்கப் போவதாக மிரட்டியே இவ்வாறு வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிப்பிற்குள்ளான இளம் தாய் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version