புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான பிரேரணை அரசியலமைப்பு பேரவையில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 9ஆம் திகதி கூடவுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக்கு காலம் தற்காலிகமாக நீடிக்கப்பட்டுள்ளது.