பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 5 பேர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை குறிவைத்து வெடிகுண்டு நாடாத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலா அல்லது வெடிகுண்டு தாக்குதலை என்பது தொடர்பில் இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version