திருகோணமலை கடற்படை முகாமில் ஒருவர் குத்திக் கொலை!

திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் கடற்படை ஊழியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு கடற்படையினரை கைது செய்துள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை கந்தேன்கெதர பகுதியைச் சேர்ந்த கே.எம்.தம்மிக்க ஸ்வர்ணபண்டார எனும் 36 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய கடற்படையினரும் அதே முகாமில் பணிபுரியும் மாத்தளை இம்புல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நேற்று (08.11) கடற்படைத் தளத்திலுள்ள மதுபான விடுதியில் கடற்படையைச் சேர்ந்த நான்கு பேர் மதுபான விருந்து நடத்தியதாகவும், அதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version