இன்றும் பலத்த மழை!

நாட்டை சூழவுள்ள தாழமுக்க நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவும் எனவும், அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version