உயர் நீதிமன்ற தீர்ப்பை மறுத்தார் மஹிந்த.

நாட்டின் மோசமான பொருளதார வீழ்ச்சிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் என நேற்று முன் தினம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

இந்த தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், உரிய நேரம் வரும்போது காரணங்களை வெளியிடுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு நேற்று பிரார்தனைகளுக்காக பாரளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்த நிலையில் ஊடகங்களுக்கு இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், பிரமாண்டமான முறையில் அது நடையெபெறுமெனவும் மேலும் கூறியுள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version