வெளிநாட்டு வேலை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி!

தென் கொரியாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி 160 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கந்தானை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் இவருக்கு எதிராக கிட்டத்தட்ட இருபது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குறித்த சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா முதல் 15 இலட்சம் ரூபா வரையான பணத்தைப் ஏமாற்றி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version