தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினூடாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு முறைகளின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை உபகரணங்கள் இன்று சந்தையை ஆக்கிரமித்துள்ளதாகவும், பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் தரமற்றதாக இருந்தால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்தும்போது, அதனை கடிப்பதன் மூலம் வாய்வழி உடலுக்கு செல்ல வாய்ப்புள்ளது எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் கொள்வனவு செய்யும்போது பாதுகாப்பை வழங்கும் EN71-3 என சான்றிதழ் பெற்றுள்ளதா என்பதையும் பிபிஏ இல்லாத அல்லது சந்தையில் இருந்து வாங்கும் போது உபகரணங்களின் அடிப்பகுதியில் 5 என்ற எண் எழுதப்பட்டிருந்தால், அவை பயன்படுத்துவதற்கு ஏற்றவை என்பதை கவனத்திற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.