நாடாளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 5 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வடக்கு, கிழக்கு, மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்..