களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்..!

களனி பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஏனைய பீடங்களின் கற்கை நெறிகள் இன்று முதல் மீள ஆரம்பமாகவுள்ளன.

இதற்கமைய மனித நேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின் கற்கை நெறிகள் ஆரம்பிக்கபடவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவ குழுவொன்றினால் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் மீது கடந்த 2ம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்காரணமாக, குறித்த பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து கல்வி செயற்பாடுகளும் கடந்த 5ம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.

இதனையடுத்து களனி பல்கலைக்கழகத்தன் விஞ்ஞானம், வணிகம், முகாமைத்துவம் மற்றும் தொழினுட்பபீடங்களின் கல்வி செயற்பாடுகள் கடந்த திங்கட்கிழமை(11) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version