தாய்வானில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு..!

தாய்வானில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

நிலஅதிர்வானது இன்று அதிகாலை 10.3 கிலோமீற்றர் ஆழத்தில் கடலில் மையம் கொண்டிருந்ததாக புகுணு ஜேர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலஅதிர்வு 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

பெரும்பாலும் உள்ளுர் பகுதிகளில் சிறிய நிலஅதிர்வு மாத்திரமே பதிவாகியுள்ளதுடன் தலைநகர் தைபேயில் நிலநடுக்கம் உணரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply