மருந்து ஒவ்வாமையினால் பதிவாகும் உயிரிழப்புகள்..!

மருந்து ஒவ்வாமை காரணமாக யாழ்; பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதாக மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

யாழ் பல்கலைக்கழக்த்தின் கலைப்பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்றும் 25 வயதான மாணவி சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

உயிரிழப்பு தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த மாணவியின் உடற்கூறு பகுதி மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்த மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படடுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version