பாதுக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம்..!

பாதுக்க, துன்னான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள ஏல நிலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் ஒருவருடைய வயது 36 என்றும் மற்றைய நபரின் வயது குறித்த தகவல்கள் வெளியாகில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply