தேசிய பாதுகாப்பு தினம் இன்று அனுஸ்ட்டிப்பு..!

தேசிய பாதுகாப்பு தினம் இன்று அனுஸ்ட்டிக்கப்படவுள்ளது.

சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சுனாமியினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் காலியில் இன்று இடம்பெறவுள்ளன.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவில் சிக்குண்டு 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமற்; போயிருந்தனர

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version