வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக காத்திருப்போருக்கான அறிவுறுத்தல்..!

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்கள் தொடர்பில் ஏமாற வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம், கேட்டுக்கொண்டுள்ளது.

தொழில் நிமித்தம் உரிய முறையில் வெளிநாடுகளுக்கு சென்றால் மாத்திரமே பிரச்சனைகள் ஏற்பட்டால் தலையிட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் உள்ள அடிமை முகாம்களுக்கு இலங்கையர்கள் கடத்தப்படுவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மியான்மாரில் சைபர் குற்றப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களை முகாம்களுக்கு கடத்துவதற்கு தலைமை தாங்கிய சீன பிரஜையான பிரதான சந்தேக நபர் உட்பட 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 56 இலங்கையர்களுக்கு மேல் இருக்கலாம் என மியன்மாருக்கான முன்னாள் தூதுவரின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் நதுன் தாரக தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version