மீண்டும் ஆரம்பமாகும் போதைப்பொருள் சுற்றிவளைப்பு பணிகள்!

போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கை இன்று (27.12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை கால விசேட கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியமையினால் 03 நாட்களுக்கு குறித்த நடவடிக்கைகளை சற்று பிற்போட நேரிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 25ம் திகதி வரை போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 13,666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,097 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply