”பல கட்சிகளும் என்னை அழைக்கின்றன” – தயாசிறி ஜயசேகர!

எதிர்வரும் அரசியல் செயற்பாடுகளுக்காக தமக்கு பல கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்துள்ள போதிலும், இதுவரை எவரிடமும் உறுதியளிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை வலுவாக வழிநடத்தக்கூடிய குழுவுடன் இணைந்து பயணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், தாம் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருப்பதால், கட்சி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது வரி விதித்து துன்புறுத்தும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version