பாண் விலை அதிகரிக்குமா?

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பின் காரணமாக பேக்கரி தொழில் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில்கொண்டு நாட்டு மக்கள் குறித்து சிந்தித்து பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்காது இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசி தீர்வு காண்பதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version