மொட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்.

தென் மாகாண முன்னாள் முதலமைச்சராக கடமையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஷான் விஜயலால் டி சில்வா இன்று (01.01) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார் என எதிர்க்கட்சி தலைவர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக ஷான் விஜயலால் டி சில்வாவும் இன்று நியமிக்கப்பட்டார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version